இலங்கை மத்திய வங்கி ஆளுநர் இன்றி சேவைகளை தொடர்கிறது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தொடர்பான பிரச்சினைக்கு இதுவரை தீர்வு வழங்கப்படவில்லை. மத்திய வங்கியின் ஆளுநராகக் கடமையாற்றிய அர்ஜுன் மகேந்திரனின் பதவிக்கு காலமும் நேற்று 30 ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்தது. என்றாலும் அவரின் சேவை நீடிப்போ அல்லது புதிய ஆளுநர் நியமிப்போ இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

புதிய ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார். என்றாலும் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அர்ஜுன் மகேந்திரன் தவறு செய்துள்ளார் என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.