இலங்கை மருத்துவ சபையின் தலைவர் வைத்தியசாலையில் அனுமதி…

இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பேராசிரியர் காலோ பொன்சேகா மாரடைப்பு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுன்னார்.

நேற்று(23) இரவு ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு சென்ற அவரை தங்கியிருந்து சிகிச்சை பெறுமாறு மருத்துவர் வழங்கிய ஆலோசனைப்படியே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.