இலங்கையில் அமுலாகும் புதிய கல்வித்திட்டத்தையும் தரம் 13 வரை கல்விகற்கும் மாணவர்களுக்கு வழங்க உத்தேசித்திருக்கும் தொழில்சார்ந்த கல்வியையும் பின்லாந்து அரசாங்கம் பாராட்டியுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் தலைமையிலான தூதுக் குழுவினரின் பின்லாந்து விஜயத்தின் போது இலங்கையின் கல்வி நடவடிக்கைகள் பற்றி பின்லாந்து அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மாணவர்களின் தொழிற்கல்வி வாய்ப்புக்களை விஸ்தரிக்க பின்லாந்து ஒத்துழைப்பு வழங்கும் என்று பின்லாந்து பிரதமரும் கல்வியமைச்சரும் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.