இலங்கை விமானப்படைக்குப் புதிதாக ஆறு தாக்குதல் விமானங்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த பிரேரணைக்கு அனுமதி வழங்கிய அமைச்சரவை, இதற்கென 560 கோடி ரூபா நிதியை ஒதுக்கவும் இணக்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், எதிர்காலத்தில் இலங்கை விமானப்படைக்குப் புதிதாக 12 ஜெட் விமானங்களைக் கொள்வனவு செய்யும் திட்டமொன்றும் இருப்பதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.