இலங்கை விமான சேவைக்கு உரித்தான விமானம் ஒன்று திடீரென ஜெர்மனியில் தரையிறக்கம்…

லண்டன் தொடக்கம் கொழும்பு நோக்கி 268 பயணிகளுடன் பயணித்து கொண்டிருந்த இலங்கை விமான சேவைக்கு உரித்தான விமானம் German – Frankfurt விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுவரை விமானம் அங்கு இருந்து புறப்படவில்லை என்பதுடன், விமானத்தில் உள்ள பயணிகளுக்கு அவசியமானவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை விமான சேவை தெரிவித்துள்ளது.