இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தெய்யந்தர தேசிய பாடசாலையின் அதிபர் விளக்கமறியலில்…

(FASTNEWS|COLOMBO) இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தெய்யந்தர தேசிய பாடசாலையின் அதிபர் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தெய்யந்தர நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தரம் 06 இற்கு மாணவர் ஒருவரை இணைத்துக் கொள்வதற்காக 8000 ரூபா பணத்தை இலஞ்சமாக பெற முயற்சித்த போது குறித்த பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.