இலஞ்சம் பெற்றுக் கொள்ள முயன்ற பொறுப்பதிகாரி விளக்கமறியலில்…

50 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்றுக் கொள்ள முயன்று கைது செய்யப்பட்ட மேலதிக படை தலைமையக பொறுப்பதிகாரி, எதிர்வரும் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமது அலுவலகத்தில் சேவை தடைக்கு உள்ளாக்கப்படுள்ள பொலிஸ் பரிசோதகர் ஒருவரிடம் கையூட்டலை பெற்றுக்கொள்ள முயற்சித்தபோது நேற்று மாலை அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.