கொழும்பு பன்னிப்பிட்டிய பகுதியில் இரண்டு இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற போது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் அவர் கைது செய்யப்பட்ட ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் மஹகமகே காமினியை எதிர்வரும் 04ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று(21) உத்தரவு பிறப்பித்துள்ளது.
10 வருடங்கள் பழமை வாய்ந்த இரண்டு வாகனங்களை ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்வதற்கான பரிந்துரையை வழங்குவதற்கு அவர் இலஞ்சம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.