2019 வருடம் முதல் 2023ம் ஆண்டு வரையில், இலஞ்ச மற்றும் ஊழலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டுத் திட்டத்தினை நடை முறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலஞ்ச மற்றும் ஊழலை தடுப்பதற்காக அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்ள் தொடர்பில் பொதுவாக செயற்படும் விதத்திலான தேசிய திட்டத்தின் தேவைப்பாட்டை கருத்திற் கொண்டு இது தொகுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது