இலத்திரனியல் வாக்களிப்பு முறை முதன்முறையாக பாராளுமன்றில் அறிமுகம்

இலங்கைப்பாரளுமன்றதின் சரித்திரத்தில் முதன் முறையாக இலத்திரனியல் வாக்கு முறை நேற்று (25) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நாணயப் பரிமாற்ற சட்டம் நேற்று பாராளுமன்றில் திருத்தங்களுக்குப் பின்னர் நிறைவேற்றப்பட்டு வாக்குப்பதிவிற்கு அழைக்கப்பட்ட போது, உறுப்பினர்கள்  இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரத்தைப் பயன்படுத்தி தமது வாக்குகளை  செலுத்தினர்.
இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 96 வாக்குகளும், எதிராக 18 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, திருத்தங்களுடன், 78 மேலதிக வாக்குகளால் வெளிநாட்டு நாணயப் பரிமாற்ற சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்போது ஜனந்டிபதி மைத்திரிபால சிறிசேன பிரசண்ணமாகியிருந்தார்.