இலவச பாடப்புத்தகங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை…

பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக பாடப்புத்தகங்கள் வழங்குவதை அரசாங்கம் இடைநிறுத்தியிருப்பதாக சிலர் மேற்கொண்டுவரும் பிரசாரத்தில் எந்த உண்மையும் இல்லை என்று கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஐ.எம்.கே.பி.இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்காக 410 வகைகளில் 43 மில்லியன் புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் பாடப்புத்தகங்களை விநியோகிப்பதற்காக அரசாங்கம் ஆண்டு தோறும் சுமார் 4 பில்லியன் ரூபாய் செலவிடுவதாக சுட்டிக்காட்டினார்.

எனவே, இவ்வாறான பொய்ப் பிரசாரங்களுக்கு ஏமாற வேண்டாமென்று கல்வி அமைச்சில் நேற்று(20) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் குறிப்பிட்டார்.