இலவச Wi-Fi திட்டம் தோல்வி – ஹரீன்

தேசிய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இலவச Wi-Fi திட்டம் தோல்வியடைந்துள்ளமையை தான் ஏற்றுக்கொள்வதாக தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சர் ஹரீன் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.

என்றாலும் குறித்த திட்டம் வெற்றியளிக்கும் வகையில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்  போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.