இளைய தள­பதி விஜய், சமந்தா, எமி ஜக்ஸன் நடித்த “தெறி” படம் வசூலில் புதிய சாதனை படைத்­துள்­ளது

கலைப்­புலி எஸ்.தாணு தயா­ரிப்பில் அட்லீ இயக்­கிய இப்­படம் சித்­திரைப் புத்­தாண்­டை­யொட்டி கடந்த 14 ஆம்  திகதி உல­கெங்கும் சுமார் 1200 திரை­ய­ரங்­கு­களில்  வெளி­யி­டப்­பட்­டது. முதல் நாளில் உல­க­ளா­விய ரீதியில் 28.96 கோடி இந்­திய ரூபாவை இப்­படம் வசூ­லித்­துள்­ளது. இதன் மூலம் விஜய் நடித்த “கத்தி” படத்தின் உல­க­ளா­விய முதல்நாள் வசூல் சாதனை (26 கோடி ரூபா) முறி­ய­டிக்­கப்­பட்­டுள்­ளது.
தமி­ழ­கத்தைப் பொறுத்­த­வரை சுமார் 420 திரை­ய­ரங்­கு­களில் வெளி­யான தெறி படம் முதல் நாளில் 13.1 கோடி இந்­திய ரூபாவை வசூ­லித்­துள்­ளது. விஜய் நடித்த திரைப்­ப­ட­மொன்று தமி­ழ­கத்தில் பெற்ற ஆகக்­கூ­டு­த­லான முதல்நாள் வசூல் இது­வாகும். இதற்­குமுன் விஜய் நடித்த படங்­களில் “கத்தி”  12.5 கோடி ரூபாவை வசூ­லித்­தி­ருந்­தது. எனினும், தமி­ழ­கத்தில் அஜித்தின் வேதாளம் படைத்த 15.1 கோடி ரூபா முதல் நாள் வசூல் சாத­னையை “தெறி” முறி­ய­டிக்கத் தவ­றி­­யுள்­ளது. எனினும், பணப் பிரச்­சி­னைகள் கார­ண­மாக செங்­கல்­பட்டில் சுமார் 60 திரை­ய­ரங்­கு­களில் கத்தி வெளி­யி­டப்­ப­டாத நிலையிலேயே 13.1 கோடி ரூபாவை தெறி வசூலித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.