இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 80 ஆயிரத்து 988 பேர் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்திலேயே அதிகப்படியான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், அது நூற்றுக்கு 41.57 சதவீதமாக பதிவாகியுள்ளது.
மேலும், ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் , கடந்த நவம்பர் மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 670 என குறிப்பிடப்பட்டுள்ளது