இவ்வருடம் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களை நடாத்த முடியாது – லக்ஷ்மன் யாப்பா

உள்ளுராட்சி மன்ற தேர்தல்களை நிச்சயமாக இந்த வருடம் நடத்த முடியாது என நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களது எல்லை நிர்ணய செயற்பாடுகள் இதுவரை இறுதி செய்யப்படாமையே இதற்கான காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.