2014ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2017ம் ஆண்டில், வௌிநாட்டு முதலீடுகள் நூற்றுக்கு 300 வீதம் அதிகரித்துள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று(31) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
அத்துடன், 1000 ஏக்கர் அளவிலான தொழிற்துறை வலையத்தை ஏற்படுத்த தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், வருங்காலத்தில் LNG மின் உற்பத்தி நிலையங்கள் இரண்டை நிர்மாணிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(rizmira)