இ.போ. சபைக்கு புதிதாக 500 பஸ்கள் – அமைச்சரவை அனுமதி…

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகளில் காணப்படும் குறைப்பாடுகளை கருத்திற்கொண்டு, புதிதாக 500 பஸ்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, நகரங்களில் உள்ள மக்கள் பயன்படுத்துவதற்காக 50-54 ஆசனங்களை கொண்ட 400 பேரூந்துகளையும், கிராமிய மக்கள் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்காக 32-35 ஆசனங்களை கொண்ட 100 பஸ்களையும் கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால், முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.