ஈரா­னிய பாரா­ளு­மன்றத் தேர்தல் இன்று

ஈரா­னிய பாரா­ளு­மன்றத் தேர்தல் இன்று வெள்­ளிக்­கி­ழமை ஆரம்பமாகின்றது.

மேற்­படி தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு வேட்பு மனுவைத் தாக்கல் செய்­தி­ருந்த வேட்­பா­ளர்­களில் ஐந்தில் ஒரு பங்­கினர் தேர்­த­லி­லி­ருந்து வாபஸ் பெற்­றுள்­ளனர்.

பாரா­ளு­மன்­றத்­துக்­கான 290 ஆச­னங்­க­ளுக்கு 4,844 பேர் போட்டியிடுவதாகவும் 1,385 வேட்­பா­ளர்கள் வாபஸ் பெற்றுள்ளதாகவும் உள்­துறை அமைச்சின் தேர்தல் தலைமையகத்தைச் சேர்ந்த மொஹமட் ஹெபஸைன் மொகிம் தெரிவித்தார்.

மேற்­படி வேட்­பா­ளர்­களின் தொகையில் வீழ்ச்சி ஏற்­பட்­டுள்­ளதை அந்­நாட்டு உள்­துறை அமைச்சர் அப்­டோல்­ரஸா ரஹ்­மானி பாஸ்லி உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளார்.

பாரா­ளு­மன்­றத்தின் ஒவ்­வொரு ஆச­னங்­க­ளுக்கும் தற்­போது சுமார் 17 பேர் போட்­டி­யி­டு­கின்­றனர் என அவர் தெரி­வித்தார்.

மொத்த வேட்­பா­ளர்­களில் 10 சத­வீ­தத்­தி­ன­ராக பெண் வேட்­பா­ளர்கள் உள்­ளனர். சுமார் 100 பெண் வேட்­பா­ளர்கள் தேர்­த­லி­லி­ருந்து வாபஸ் பெற்­றுள்ள நிலையில் சுமார் 500 பெண் வேட்­பா­ளர்கள் இந்தத் தேர்தலில் போட்­டி­யி­டு­கின்­றனர்.

அர­சாங்க ஆத­ரவு வேட்­பா­ளர்­களில் ஜனா­தி­பதி ஹஸன் ரோவ்ஹாணியின் ஆத­ர­வா­ளர்­க­ளான சீர்­தி­ருத்­த­வா­தி­களும் பழைமைவாதிகளும் உள்­ள­டங்­கு­கின்­றனர்.

பிர­தான பழை­மை­வாத வேட்­பாளர்கள் பட்­டி­யலில் முன்னாள் பாராளுமன்ற ­சபா­நா­யகர் கோலம் அலி ஹட் டாட் அப்டெல் முன்னிலையில் உள்ளார். அவ­ரது மகள் அந்­நாட்டு உச்ச நிலைத் தலைவரான ஆயத்துல்லாஹ் கமெய்னியின் மகன்­மாரில் ஒரு­வரைத் திரு­மணம் செய்­துள்­ளமையும் குறிப்­பி­டத்­தக்­கது.

தலை­ந­க­ருக்கு வெளி­யி­லான பெறு­பே­றுகள் தேர்தல் நிறை­வு­பெற்று 24 மணி நேரத்தில் வெளி­யா­கலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. ஆனால் தலை­ந­க­ரி­லான தேர்தல் பெறு­பே­றுகள் வெளி­வ­ரு­வ­தற்கு 3 நாட்கள் வரை செல்­லலாம் என எதிர்­வு ­கூ­ரப்­ப­டு­கி­றது.

தலை­ந­கரில் 30 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை 12 மில்­லியன் மக்கள் தெரி­வு­செய்­ய­வுள்­ளனர்.

அத்துடன் ஈரானின் அடுத்த உச்சநிலைத் தலைவரை தெரிவுசெய்யவுள்ள அதி அதிகாரத்துவம் பொருந்திய நிபுணத்துவ சபைக்கான 88 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பும் முதல் தடவையாக ஒரே தினத்தில் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.