ஈராக்கின் பாக்தாத் நகரில் வெடி மருந்து கிடங்கு வெடித்து 7 பேர் உயிரிழப்பு…

ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் வெடிமருந்து கிடங்கு வெடித்து சிதறியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாக்தாத்தில் அமைந்துள்ள சத் நகரில் வெடி மருந்து கிடங்கு உள்ளது. இங்கு கன ரக ஆயுதங்கள், கையெறி குண்டுகள் மற்றும் வெடி மருந்துகள் சேமித்து வைக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில், நேற்று இந்த கிடங்கு திடீரென வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 22 பேர் காயம் அடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

வெடி விபத்து குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.