ஈரானில் – 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

(FASTNEWS|COLOMBO) – ஈரான் நாட்டின் தென்மேற்கில் உள்ள குசேஸ்தான் மாகாணத்துக்குட்பட்ட மஸ்ஜித் சுலைமான் பகுதியில் இன்று(08) நிலநடுக்கம் ஏற்பட்டது.

பூமியின் அடியில் 17 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.7 அலகுகளாக பதிவானதாக ஈரான் புவிசார் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேத விபரங்கள் தொடர்பாக உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.