ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் அலி லாரிஜனி (Ali Larijani) இந்த வாரமளவில் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வியட்நாமிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்ட பின்னர் அவர் இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார்.
இதேவேளை, இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் அவர் இங்கு பல உயர்மட்ட அரச தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, இரு தரப்பு உறவுகள் மற்றும் உலக அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சிரியாவில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்கள், அதன் நிலைமை குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.