சிலி நாட்டின் அருகே உள்ள ஈஸ்டர் தீவில் இன்று 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக பதிவான இந்த நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.