பள்ளிக்குடா உக்குவா ஹேவத் ஜயவீர படபெதிகே பிரசன்ன இந்திக அல்லது உக்குவா என்று அழைக்கப்படும் நபரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவத்தில் ஆமி அமில எனப்படும் நிரோஷன ராஜபக்ஷ எனும் நபரை பொலிஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில், ஆமி அமில தங்கல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் சந்தேகநபரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் துப்பாக்கி ரவைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் 26ஆம் திகதி தங்கல்ல பள்ளிக்குடா பிரதேசத்தில் உக்குவா எனும் நபர் கொலை செய்யப்பட்டிருந்தார்.