(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
உடனடியாக நாடாளுமன்ற தேர்தல் நடத்த வேண்டியது அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் பல புலம்பெயர் அமைப்புக்களுக்கான தடையை நீக்கியுள்ள நிலையில், கட்டார் அமைப்புக்களின் மீதான தடைகளையும் நீக்கவேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதோடு முன்னைய அரசாங்கத்தில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் இன்னும் பல இருக்கின்றதாகவும் அவற்றினையும் நீக்கவேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.