உடற்பயிற்சி நடைபாதையை உடைத்தவர்களுக்கு பிணை

வத்தளை-களுஎல உடற்பயிற்சி நடைபாதையை உடைத்ததாகக் கருதப்படும் சந்தேக நபர்கள் ஐவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை இன்றைய தினம் வத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே குறித்த சந்தேக நபர்களை 5000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், 3 சரீரப் பிணையிலும் விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது..

வத்தளை நீதவான் நீதிபதி பூர்ணிமா பரணகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அத்துடன் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் வத்தளை பொலிஸ் நிலையத்திற்கு வருகைத் தந்து சந்தேக நபர்கள் கையொப்பம் இடவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதோடு, இவர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.