உடுவே தம்மாலோக தேரர் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்…

லண்டன் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற வணக்கத்திற்குரிய உடுவே தம்மாலோக தேரர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

தேரருக்கு வௌிநாடு செல்ல தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையினால் குடிவரவு அதிகாரிகள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.