பிரபல கால்பந்து வீரரான மமடு சாக்கோ (Mamadou Sakho), தன்னுடைய சிறு வயதுகளில் பாரிஸ் நகர தெருக்களில் பிச்சை எடுத்தாக தெரிவித்துள்ளார்.
லிவர்பூல் அணியின் முன்னாள் கால்பந்து வீரரான மமடு சாக்கோவிற்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கிரிஸ்டல் அரண்மனை அருகே உள்ள தெருக்களில் வசிக்கும் வீடற்றவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.
இதுகுறித்து பேசியிருக்கும் மமடு, “நான் என்னுடைய குழந்தை பருவத்தில் பாரிஸ் நகர தெருக்களில் வீடில்லாமல் பிச்சையெடுத்து தான் வளர்ந்தேன். நான் இப்போது அதனை திரும்ப கொடுத்து வருகிறேன்.
“திரும்ப கொடுப்பது முக்கியமான ஒன்று. இது பணம் பற்றி மட்டுமல்ல, அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் நேரம் ஆகும். சேல்ஹர்ஸ்ட் பார்க் மைதானத்திற்கு அருகில் க்ரோய்டனில் அதிகமான மக்கள் குளிரில் தூக்கமில்லாமல் தவித்து வருகின்றனர்.
ஆப்பிரிக்காவில் உருவாகி வரும் ஆதரவற்றோர் இல்லம் மக்களை கவனித்துக் கொள்வதற்கு உதவும் இடமாக இருக்கும் என நம்புகிறேன். அவர்களுக்கு புன்னகையை கொடுக்க விரும்புகிறோம். அவர்களுக்கு அதிகாரத்தை கொடுத்து, இந்த உலகம் அவர்களுக்கு தேவை என்பதை காட்ட விரும்புகிறோம்.” என தெரிவித்துள்ளார்.


