ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவிற்கு எதிரான விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு இன்டர்போல் பொலிஸாரிடம் இருந்து உத்தரவை பெற்றுள்ளது.
இன்டர்போல் பொலிஸார் இன்று (15) இந்ந உத்தரவை வழங்கியுள்ளனர்.
மேலும், இந்த கோரிக்கையை இன்று பிற்பகல் பரிசோதனை செய்ய இருப்பதாக கோட்டை நீதவான் தெரிவித்துள்ளார்.
இவர் கடந்த 2005ஆம் ஆண்டு, இலங்கை விமானப் படைக்காக கொள்வனவு செய்த மிக் விமானம்தொடர்பிலான நிதி முறைகேடுகள் குறித்தே விசாரணைகள் மேற்கொள்ள இருப்பதாக தெரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, உதயங்க வீரதுங்க தற்போது உக்ரைன் நாட்டில் வசித்து வருகி்றமை குறிப்பிடத்தக்கது.