உதயங்கவை தாய்லாந்தில் மஹிந்த சந்தித்தது ஏன்?

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச தாய்லாந்தில் வைத்து சட்டவிரோத ஆயுத விற்பனையுடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கைக்கான ரஷ்யாவின் முனனாள் துதுவர் உதயங்க வீரதுங்கவை சந்தித்துள்ளார்.

உக்ரேய்ன் தீவிரவாதிகளுக்கு சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை விற்பனை செய்ததாக உதயங்க வீரதுங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தாம் உக்ரேய்ன் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யவில்லை எனவும், கடந்த அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களை பழிவாங்கி வருவதனால் தற்போதைக்கு இலங்கைக்கு வரப் போவதில்லை எனவும் தாம் உக்ரேய்னில் வசித்து வருவதாகவும் உதயங்க கடந்த ஆண்டு குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான ஒர் நிலையில் தாய்லாந்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவை இலங்கைக்கான ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க சந்தித்துள்ளார்.