இலங்கைக்கான உக்ரேன் நாட்டு முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவிற்கு உரித்தான இந்நாட்டு வங்கிக் கணக்குகள் 16 இனை இடைநீக்கம் செய்ய கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன அவர்கள் இன்று(04) தெரிவித்துள்ளார்.
மிக் விமானக் கொள்வனவு தொடர்பிலான பணச் சலவைக்காக சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதோடு, பொலிஸ் நிதி மோசடிப் பிரிவினரால் குறித்த வங்கிக் கணக்குகள் பரிசீலனை செய்ய நீதிமன்றில் கோரிய கோரிக்கையினை ஆராய்ந்தே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.