உதித் லொக்குபண்டார, மஹிந்தவின் தனியார் செயலாளர் பதவியில் இருந்து இராஜினாமா…

(FASTGOSSIP | COLOMBO) –  எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தனியார் செயலாளராக ஷாணிகா கொபல்லவ நியமிக்கப்பட்டுள்ளார்.

ஷாணிகா கொபல்லவ கடந்த மார்ச் 01ம் திகதி எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.

எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தனியார் செயலாளராக இருந்த உதித் லொக்குபண்டார தனது அரசியல் நடவடிக்கைகளில் முழு நேர பங்களிப்பினையும் செலுத்த வேண்டியுள்ளதால் பதவி இராஜினாமா செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.