உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை முழுமையாக கைவிட வேண்டும்..- சஜித் பிரேமதாச..

(FASTNEWS | COLOMBO) – பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தைக் கைவிட்டு, பயங்கரவாத தடைச் சட்டத்தை முன்னர் இருந்ததைவிட பலப்படுத்த வேண்டும் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் இன்று(17) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஜனநாயகம், மனித உரிமைகள் என்பனவற்றை பாதுகாத்தல் என்பதை தேசிய ஒழுங்கு பத்திரத்திலிருந்து சற்று ஒதுக்கிவைத்து, பயங்கரவாதத்தை தடுக்க தேசிய பாதுகாப்புக்கு முதலிடம் வழங்க வேண்டும் எனவும், இதற்காக உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை முழுமையாக கைவிட வேண்டும் என்றும் அமைச்சர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.