உமாஓயா வேலைத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளிலுள்ள மக்களுக்கு தற்காலிகமாக, பண்டாரவளையிலுள்ள அரசாங்க விடுதியொன்றை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பண்டாரவளை பிரதேச செயலகத்தில் நேற்று(04) மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
மகாவலி அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனுராத ஜெயரத்ன, அமைச்சர்களான ஹரின் பெர்ணான்டோ, டிலான் பெரேரா உள்ளிட்ட குழுவினர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.