உமா ஓயா திட்டத்தினால் ஏற்பட்டு வரும் பாதிப்புகளை கருத்திற் கொண்டு திட்டத்துக்கு அண்மித்ததாக வசிக்கும் சுமார் 5,000 குடும்பங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது.
குறித்த திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக வாழ சிறிய நகரமொன்றை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உமா ஓயா சுரங்க வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதில் இருந்து பதுளை, பண்டாரவளை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் முதற் கட்டமாக பதுளை மாவட்டத்தில் 5000 குடும்பங்களை அகற்றுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
மாவட்டத்தில் காணி தட்டுப்பாடு நிலவுவதுடன், புதிய வேலைத்திட்டங்களின் கீழ் வீடுகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் இதன் பிரகாரம், பதுளை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான சிறிய நகரமொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா மேலும் தெரிவித்துள்ளார்
(rizmira)