உமா ஓயா திட்ட நிர்மாண பணி காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனக் கோரி பண்டாரவளை நகரில் கடைகள் மூடப்பட்டு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த இந்த திட்டத்தின் அகழ்வு காரணமாக தமது வீடுகளில் பிளவுகள் மற்றும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
உமா ஓயா திட்டத்தின் நிர்மாண பணிகள் 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.