உமா ஓயா திட்டத்தின் அகழ்வுப் பணிகள், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
உமா ஓயா திட்டம் தொடர்பாக ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலைமை குறித்து ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் குறித்த இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இம்மாதம் 31 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ள நோர்வே மற்றும் ஜேர்மன் நிபுணர் குழுவினரால் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் அடிப்படையிலான புதிய பரிந்துரைகளை ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வழங்கவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.