உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 05 ஆம் திகதி ஆரம்பம்

(FASTNEWS|COLOMBO) – 2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த பரீட்சை, 2 678 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைகளை நடாத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இம்முறை உயர்தரப் பரீட்சையில்  3 37 704 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

இதேவேளை, பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகளை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் விநியோகிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.