உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணியின் 2ஆம் கட்ட நடவடிக்கை எதிர்வரும் 11 ஆம் திகதி முதல்…

க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணியின் இரண்டாம் கட்ட நடவடிக்கை, எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்வதற்காக 24 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், இவற்றில் 4 பாடசாலைகள் முழுமையாக மூடப்படவுள்ளதுடன், ஏனைய 20 பாடசாலைகள் கட்டம் கட்டமாக மூடப்படும் எனவும் ​ அறிவித்துள்ளது.