உயர் தரப் பரீட்சையினை பிற்போடுவது குறித்து ஜனாதிபதி அவதானம்..

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த உயர் தரப் பரீட்சையினை பிற்போடுவது குறித்து அவதானம் செலுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று(01) காலி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்திருந்தார்.

வெள்ளநிலை மற்றும் மண்சரிவு அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துள்ள பிரதேச பாடசாலை மாணவர்களது நிலையினை கருத்திற் கொண்டே அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் க.பொ.த உயர் தரப் பரீட்சையினை பிற்போடுவது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்திருந்தார்.

(rizmira)