உயர் நீதிமன்றினால் மது மாதவவின் மனு விசாரணை இடைநிறுத்தம்

(FASTNEWS | COLOMBO) – மினுவாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் தன்னை கைது3) செய்வதை தடுக்கும் முகமாக தடையுத்தரவு ஒன்றினை பிறப்பிக்குமாறு கோரி பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் உப தலைவர் மதுமாதவவினால் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணையினை இடைநிறுத்த இன்று(13) உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுமாதவவை கைது செய்ய போதிய சாட்சியங்கள் இல்லை என நீதிமன்றுக்கு தெரிவித்திருந்த நிலையில் குறித்த மனு தொடர்பில் ஆராய்ந்து குறித்து உத்தரவு வழங்கப்பட்டுள்ளது