(FASTNEWS | COLOMBO)- போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கும் நாள் தொடர்பில் தான் திட்டமிட்டு நாள் குறித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று(31) தெரிவித்திருந்தார்.
உயிரினை பணயம் வைத்து தான் போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தான் போராடுவது எதிர்கால சந்ததியினரின் நலனுக்காகவே எனவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.