உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் காரணமாக, பொருளாதார பாதிப்பு தொடர்பான மதிப்பீடு

(FASTNEWS| COLOMBO)- உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் காரணமாக, சிறிய, நடுத்தர வர்த்தகர்களுக்கு ஏற்பட்ட, பொருளாதார பாதிப்பை மதிப்பீடு செய்து, ஆய்வறிக்கையொன்றை தயாரிக்கவுள்ளதாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு, புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் ஒவ்வொரு மாதமும் பணிபுரிந்த சேவையாளர்களின் எண்ணிக்கை, மொத்த வருமானம் என்பவைத் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலால் பாதிப்புக்குள்ளான நிறுவனங்கள், வாகனங்கள், கட்டடடங்கள், இயந்திரங்கள், உபகரணங்கள் போன்றவைத் தொடர்பிலும் தகவல்களும் சேகரிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.