உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேகநபர்களின் 41 வங்கிக் கணக்குகள் முடக்கம்

(FASTNEWS|COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் 41 வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த வங்கிக் கணக்குகளில் 134 மில்லியன் ரூபா பணம் வைப்பிலிடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதற்கு மேலதிகமாக 14 மில்லியன் ரூபாய் பெறுமதியான சந்தேகநபர்களின் சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.