உயிர்த்த ஞாயிறு தெரிவுக் குழுவுக்கு 24ம் திகதியன்று ஊடகங்களுக்கு அனுமதியில்லை

(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் அடுத்த சாட்சிப் பதிவுகளின் போது ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என தெரிவுக் குழுவின் தலைவரும், பிரதி சபாநாயகருமான ஜே.எம்.ஆனந்த குமாரசிறி தெரிவித்திருந்தார்.

எதிர்வரும் 24ம் திகதி இடம்பெறவுள்ள தெரிவுக் குழுவின் சாட்சியங்களுக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதானிகள் ஐவர் அழைக்கப்பட்டுள்ளமையினால் தெரிவுக் குழுவின் உறுப்பினர்கள் உடன் இது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் எட்டப்பட்டதாக பிரதி சபாநாயகர் மேலும் தெரிவித்திருந்தார்.