(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கிடைக்கப் பெற்றுள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவின் அறிக்கையை கத்தோலிக்க திருச்சபையிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாக இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பொலிஸாரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை குறித்து தங்களின் நிலைப்பாடு என்னவென ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.