05 மாவட்டங்களுக்கு உரத்தை விநியோகிக்கும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருவதாக இலங்கை உரக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானிலிருந்து 48,000 மெற்றிக் டொன் உரத்தை ஏற்றிய குறித்த கப்பல் நேற்று முன்தினம்(07) இலங்கை துறைமுகத்தை வந்தடைந்தது.
உர பகிர்ந்தளிப்பு முறையாக இடம்பெறுவதாக, இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.
துறைமுகத்தில் இருந்து 250 பாரவூர்திகளில் குறித்த இந்த உர விநியோகத்தை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
#reeshma