(FASTNEWS|COLOMBO)- கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதலினால் சிறிய மற்றும் நடுத்தர புதிய உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள வர்த்தக பாதிப்பினை கண்கிடுவதற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரத்தியேகமாக கணக்கெடுப்பினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலினால் நிறுவனங்களிலுள்ள இயந்திரங்கள், உபகரணங்கள், மற்றும் வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக இதன்போது கண்டறியப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வர்த்தக ரீதியிலான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ள நிறுவனங்கள், பயணிகள் போக்குவரத்து, பொருட்கள் சந்தைப்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.