(FASTGOSSIP|COLOMBO) – இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் இல் ஆரம்பமாகவுள்ள ஒருநாள் உலகக் கிண்ண போட்டித் தொடருக்காக இலங்கை கிரிக்கெட் அணியானது நாளை(07) நாட்டில் இருந்து புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, இலங்கை அணியானது இன்றைய தினம் (06) மதவழிபாடுகளில் ஈடுபடவுள்ளது. உலகக் கிண்ண இலங்கை அணிக்கு திமுத் கருணாரத்ன தலைமை தாங்குகிறார்.
தொடரில் இலங்கை அணியானது முகங்கொடுக்கும் முதலாவது போட்டியானது நியூசிலாந்து அணிக்கு எதிராக ஜூன் மாதம் 01ம் திகதி இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.