(FASTNEWS | COLOMBO) – 2019ம் ஆண்டுக்கான உலகக் கிண்ண ஒருநாள் போட்டித் தொடரினை இலங்கையில் உத்தியோகபூர்வமாக ஒளிபரப்ப இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.
இது தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் சபையினால் (ICC) அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
அதனிடையே இலங்கையில் வானொலி ஒலிபரப்பு பங்குதாரிகளாக சித எப்.எம். இற்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், போட்டிகளின் விசேட தருணங்களை ஒளிபரப்ப (Video Clips) ‘த பபரே’ இணையத்தளத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இம்முறை உலகக் கிண்ண போட்டிகள் மே 30ம் திகதி முதல் ஜூலை 14ம் திகதி வரை இங்கிலாந்தில் இடம்பெறவுள்ளது.