உலகின் எந்தவொரு நாட்டிலும் இல்லாத கலாச்சாரம் இலங்கையில் காணப்படுகின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கை உயரிய கலாச்சார விழுமியங்களைக் கொண்ட நாடு என குறிப்பிட்டுள்ள அவர் நல்லொழுக்கமுடைய மற்றும் சமாதானமான நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
கண்டி பெரஹரா நிறைவடைந்தமை குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வில் பங்கேற்ற போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
(rizmira)